Monday, October 24, 2022

ஹோமா? வேண்டவே வேண்டாம்!

 

மாலு!

இதோ வரேன்!

“மாலு, வாசல்ல யாரோ பெல் அடிக்கறா, போய் பாரு” பேப்பரை புரட்டியவாறே சொன்னான் கோபால்.

“வரேன், ஒரு நிமிஷம்.”

உக்கார்ந்து பேப்பர் படிக்கறவர் எழுந்து திறக்கக் கூடாதா, எல்லாத்துக்கும் நான் வரணும் என்று கொஞ்சம் சலிப்புடன் எண்ணியவாறே மாலு கைகளைத் துடைத்தபடி சமையலறையிலிருந்து வேகமாய் வந்து வாயிற்கதவைத் திறந்தாள்.

“கோபால் இருக்கானா?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார் இரண்டாவது மாடி வாசியான பிரகாஷ் தன் மனைவி புவனாவுடன்.

“வாங்கோ,  என்ன திடீர்னு காலங்கார்த்தால விஜயம்? என்ன சமாச்சாரம்?” என்றான் கோபால்.

“சமாச்சாரம் இருக்கு. அதான் வரோம். நாங்க இங்கேயிருந்து “ஷிஃப்ட்” பண்றோம் கோபால். அதான் சொல்லிண்டு போலாம்னு வந்தோம்.”

“ஷிஃப்ட் பண்றேளா? ஏன்? எங்க போறேள்? வேற ஊருக்கா?” என்று சற்று வியப்புடன் வினவினான் கோபால்.

கோபாலுக்கும் மாலுவுக்கும் ஒரே ஆச்சர்யம். இருபது வருஷமாக இங்கே இருப்பவர்கள் திடீர்னு மாறிப்போகிறோம் என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்?

“இல்ல, இதே ஊர்ல தான், பேரூர் பக்கத்துல. புன்னகைன்னு ஒரு சீனியர் சிடிசன் ஹோம். அங்கே ஷிஃப்ட் பண்றோம்.”

“ஹோமுக்கா? ஏன்?”

“கொஞ்ச நாளாவே இதைப்பத்தி யோசிச்சிட்டு இருந்தோம். இப்ப தான் டிசைட் பண்ணினோம்.”

“அங்கே நமக்கு சமைக்கற வேலை இல்ல. வேலைக்கு ஆள் எல்லாம் அவாளே ஃபிக்ஸ் பண்ணித் தந்துடுவாளாம்” இது புவனா.

“அங்க போனா உங்களுக்கு போர் அடிக்காதா? நன்னா யோசிச்சிட்டு தான் போறேளா?” என்றான் கோபால்.

“அங்க இருக்கறவா எல்லாம் அதப்பத்தி ரொம்ப ஒசத்தியா சொல்றா. நல்ல செக்யூரிடி இருக்கு. 24/7 ஒரு நர்ஸ் இருப்பாளாம். ஆம்புலன்ஸ் ரெடியா எப்பவும் இருக்குமாம். மூணு வேளை வெரைட்டியா நல்ல சாப்பாடு. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு. புவனாவுக்கும் ரிலீஃப்… பாவம், அவளும் சமையல் வீட்டு வேலன்னு இத்தனை வருஷமா ஒழைச்சுட்டிருக்கா.“

“ஆனா அங்க லைஃப் இங்க மாதிரி இருக்குமா? போர் அடிக்கும். எல்லாம் வயசானவங்க சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பாங்க. இங்க மாதிரி அங்க இருக்காது.  தவிர மாலுவுக்கு வீட்டு வேலை செய்யறது சமைக்கறது எல்லாம் ரொம்ப பிடிக்கும். இல்லே மாலு?” என்று மாலுவைப் பார்த்து சொன்னான் கோபால்.

மாலு செயற்கையாக  புன்னகை செய்தாள்.

“நீங்களும் இதப்பத்தி யோசியுங்கோ.” என்றாள் புவனா.

“நமக்கு வேலைலேர்ந்து ஓய்வு மாதிரி நம்ம லேடீஸுக்கும் ஓய்வு வேண்டாமா? இத்தனைக்கும் அவாளும் வேலைக்கு போனவா தான். வேலைக்கும் போயிண்டு வீட்டையும் கவனிச்சிண்டு… அப்பப்பா! அவாளுக்கும் ஒரு ரெஸ்ட் வேண்டாமா?” இது பிரகாஷ்.

“அதெல்லாம் நமக்கு சரி  வராதுப்பா. அங்க எல்லாரும் ஓல்ட் பீப்பிளா இருப்பா.. டல்லா இருப்பா. நமக்கு இங்க தான் சரி.”

“நாமும் ஓல்ட் தானே?” என்றான் பிரகாஷ்.

அவன் அப்படி சொன்னது கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் முகபாவனையிலிருந்து தெரிந்தது.

“அதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா. இங்க என்ன கஷ்டம்? எதுக்கு சேஞ்ச் பண்ணனும்?”

“சரிப்பா. உங்க இஷ்டம். அப்ப நாங்க போயிட்டு வரோம். வேன் வந்திருக்கு. சாமானெல்லாம் ஏத்தணும். லன்சுக்கு அங்கே போயிடலாம்னு இருக்கோம்”

“எங்காத்துக்கு கொஞ்சம் வரயா, மாலு. ஏதேதோ சாமானெல்லாம் இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு போறோம். உனக்கு எதாவது யூஸாகுமான்னு பார்க்கறயா? என்றாள் புவனா.

“ஹலோ, நான் புவனா வீட்டு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?”

“சரி, சீக்கிரம் போனேன் வந்தேன்னு வா.”

புவனா வீட்டிற்கு போனதும் அவள் மாலுவிடம், “கோபால் உன்னை நன்னா பிடிச்சிண்டிருக்கார். உன்னை எங்கே போகவும் விட இஷ்டம் இல்லை போல இருக்கு.” என்றாள்.

“இவர் ஒரு வருஷமா என்னை படுத்தற பாடு உனக்கே தெரியும். புவனா. சர்ஜரி ஆனதுலேர்ந்து இப்படித்தான். எப்பப் பார்த்தாலும் மாலு, இதக்கொண்டு வா. அதைக்கொண்டுவா, வெளில கோவிலுக்கோ, கடைக்கோ போனாலும் கால் பண்ணிண்டே இருப்பார். போனா உடனே திரும்பி வந்துடணும்.. கட்டிப்போட்ட மாதிரி இருக்கு. வெளில யார் கிட்டேயும் சொல்ல முடியல்ல. அவரை விட்டுக்கொடுக்க மனசு வரல்ல. நீ சொன்னதுனால இப்படி கொட்டிட்டேன்.”

புவனாவுக்கு மாலுவைப் பார்த்து பாவமாக இருந்தது.

“இதுக்கு ஒரே வழி நீங்களும் எங்க மாதிரி சீனியர் சிடிஸன் ஹோமுக்கு வரணும். அங்க அவருக்கு நன்னா பொழுது போகும். உன்னைப் பிடுங்கி எடுக்க மாட்டார்” என்றாள் புவனா.

“அதெல்லாம் நடக்காத காரியம். புவனா. பேசி என்ன பிரயோஜனம்? விடு.  நீ உன் ப்ளானெல்லாம் சொல்லு.”

புவனா வீட்டிற்கு போனதும் அங்கு ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்திருந்த சாமான்களை காட்டிய புவனா, “இதிலிருந்து உனக்கு வேண்டியதை எடுத்துக்கோ.” என்றாள். அவைகளிலிருந்து ஒரு தோசைத்திருப்பியை மட்டும் மாலு எடுத்துக்கொண்டாள். “இது போதும். தேங்க்ஸ்.” என்றாள்.

புவனா மேஜை மீது வைத்திருந்த ஒரு பேக்கட்டை மாலுவிடம் தந்தாள், “இது ஓனக்கு என் ப்ரசன்ட். அன்ப்ரேக்கபுள் டீசெட்.”

“ஓ! தேங்க் யூ, புவனா! நான் உனக்கு ஒண்ணுமே கொடுக்கல்லியே. நீ போகப்போற விஷயம் நீ சொல்லவே இல்லை”

“ஆதனால பரவாயில்லை. உன் ஃப்ரெண்ட்ஷிப் போதும்.”

மாலு புவனாவைக் கட்டிக்கொண்டாள்.”

“புவனா, உன்னை ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்.” என்றாள் மாலு வருத்தத்துடன்.

“பாவம். மாலு. அவளுக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்.” புவனாவின் மனதில் இந்த எண்ணம் ஓடியது.

மாலு திரும்பி வந்ததும் கோபால் அவளிடம், “நான் எழுதி கொடுக்கறேன். மாலு. அவா பத்து நாள்ள அலறியடிச்சிண்டு திரும்பி வராளா இல்லையான்னு பாரு.”

“அவா சொல்றதப் பார்த்தா அங்க ரொம்ப நன்னாயிருக்கும் போல இருக்கு.”

கோபால் அவளை முறைத்தான்.

“உனக்கு போக ஆசையா இருக்கு போல. வர வர நீ சமைக்க சோம்பல் படறே. நம்ம ரெண்டு பேருக்கு சமைக்கறது என்ன கஷ்டம்? இங்க பாரு. நமக்கு அதெல்லாம்  சரிப்படாது. சரி, சரி. நீ போய் செகண்ட் டோஸ் காபி கொண்டு வா.”

“ஒரு நாள் அவர் சமைச்சு பார்க்கட்டும். அப்புறம் தெரியும்" என்ற எண்ணிய படி மாலு அடுக்களைக்கு சென்றாள்.

நாட்கள் கழிந்தன, வாரங்கள் கழிந்தன, இரண்டு மாதமும் கழிந்தது.

கோபால் அவ்வப்பொழுது, புவனாவிடமிருந்து என்ன ந்யூஸ் என்று மாலுவிடம் விசாரிப்பான். அவன் நினைத்தபடி அவர்கள் ‘அலறியடிச்சிண்டு’ திரும்பி வரவில்லை.

“அவாளுக்கு அங்க ரொம்ப நன்னாயிருக்காம். ஃபுட் ரொம்ப டேஸ்டியா, வித விதமா இருக்காம். புவனா திருப்புகழ் க்ளாஸ், யோகா எல்லாம் அட்டன்ட் பண்றாளாம். பிரகாஷ் டேபிள் டென்னிஸ் ஆடப்போறாராம். சாயங்காலம் ஃப்ரென்ட்ஸோட ஸீட்டாட்டமாம். இரண்டு பேரும் காலைல வாக்கிங்க் போறாளாம். புவனா சொல்றா.” என்றாள் மாலு.

“சீட்டாட்டமா?”

“ஆமா, புவனா சொன்னா.”

கோபாலுக்கு சீட்டாட்டம் மிகவும் பிடித்த விஷயம்.

பிறகு  ஒரு நாள் பிரகாஷிடமிருந்து கோபாலுக்கு ஃபோன் கால் வந்தது

“கோபால், நியூ இயர் வரப்போறது இல்லையா? அதனால் நியூ இயர் ஈவ் அன்னிக்கு இங்க பெரிசா செலிப்ரேட் பண்ணப்போறா. ஸ்பெஷல் டின்னர், தவிர கேம்ஸ், எல்லாம் இருக்கும். நீயும் மாலதியும் வாங்க.”

கால் முடிந்ததும் கோபால் மனைவியிடம்,

“பிரகாஷ் கூப்பிடறானே? போலாமா?” என்றான்.

“நீங்க டிசைட் பண்ணுங்கோ.” என்றாள் மாலதி சமயோசிதமாக. அவளுக்கு ஏற்கனவே புவனா இந்த புதுவருஷ கொண்டாட்டம் பற்றி சொல்லியிருந்தாள். தான் போகலாம் என்று சொன்னால் உடனே கோபால் எதுக்காக போகணும் என்பான்.

“ஸரி. போயிட்டு தான் பார்ப்போமே, என்ன தான் அங்க இருக்குன்னு.” என்றான் கோபால்.

மாலதிக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

புது வருஷத்துக்கு முந்தின மாலை.  “புன்னகை” என்ற அந்த  சீனியர் சிடிசன் ஹோமின் கம்யூனிட்டி ஹாலில் ஏற்பாடெல்லாம் பிரமாதமாக இருந்தது. புவனா மாலுவிடம் நீ என்னோட இரு. அவங்க ஆம்பிளைகள் ஒண்ணா இருக்கட்டும்.” என்றாள். 

ஹாலில் நாற்காலிகள் பெரிய வட்டமாகப் போடப்பட்டிருந்தன., க்விஸ், பாஸிங்க் தி பார்சல் போன்ற விளையாட்டுகள் எல்லோரும் உற்சாகமாக விளையாடினார்கள். பாட்டு, டான்ஸ் போன்றவைகளுக்கும் குறைவில்லை. சாப்பிட சூப், பகோடா, ஆலு பரோட்டா, க்ரீன் தால், சாம்பார் சாதம், குலோப்ஜாமுன், ஐஸ்க்ரீம் என்று வித விதமான அயிட்டங்கள்.

6 மணிக்கு தொடங்கின நிகழ்ச்சிகள் சரியாக 9 மணிக்கு முடிவடைந்தன.

"சரி, பிரகாஷ். எல்லாம் நன்னா இருந்துது. ரொம்ப தேங்க்ஸ். அப்போ நாங்க கெளம்பறோம்.” என்றான் கோபால்.

“ராத்திரி ஏன் ட்ரைவ் பண்ணிண்டு போறே, கோபால். ராத்திரி தங்கிட்டு மார்னிங் ப்ரெக்ஃபாஸ்ட்சாப்பிட்டுட்டு போங்களேன்.” என்றான் பிரகாஷ்.

“சரி, ப்ரகாஷ்.” கோபால் நல்ல ‘மூடி’ல் இருந்தான்.

காலையில் கோபாலும் பிரகாஷும் வாக்கிங் போய்விட்டு வந்தார்கள். பிறகு  கோபாலும் மாலுவும் டிபன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினார்கள் .

காரில் வரும் வழியில் கோபால் பேச்சை ஆரம்பித்தான்.

“மாலு, பிரகாஷும் நானும் இன்னிக்கு கார்த்தால வாக்கிங் போனோம் இல்லையா? அப்போ அவன் சொன்னான், அவா வீட்டுக்கு அடுத்த கட்டுல, ஒரு நல்ல வீடு காலி இருக்காம். வேணும்னா நமக்கு ஏற்பாடு பண்ணித் தரானாம். வாடகைக்கு. உனக்கு வரணுன்னு இருந்தா நாம வரலாம். எனக்குத் தோணறது கொஞ்சம் நாள் இருந்து பார்ப்போமேன்னு. நீ என்ன சொல்றே?.”

“நீங்க டிசைட் பண்ணுங்கோ.”

“எல்லாம் உனக்காகத்தான் மாலு. நீ எப்பவும் சமைக்க அலுத்துக்கறே. சரி. உனக்கும் கொஞ்சம் சேஞ்சாக இருக்கும், ரெஸ்ட் கிடைக்கும்னு தான் பார்க்கறேன்.”

மாலு உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

“எனக்கு நீங்க எப்படி டிசைட் பண்ணினாலும் சரி தான்.”

அன்று தொடங்கியது நிம்மதியான வாழ்வு மாலுவுக்கு. அவள் முகத்தில் இப்போது "புன்னகை"!

 

 

Sunday, September 19, 2021

அழிக்காதே!

 

அழிக்காதே தம்பி, அழிக்காதே இந்த பூமிதனை, இது 

இயற்கை தந்த பரிசு, அறியாயோ நீ?

 

அண்டம் எங்கும் தேடினார்,

எங்கும் காணவில்லை, உயிரினம் (அழிக்காதே)

 

எத்தனை எத்தனை அழகுகள்!

வண்ணத்து பூச்சிகள், வாசமிகு மலர்கள்

நீல வானம், தென்றல் காற்று, (அழிக்காதே)

 

புசிக்க காய்கறி, சத்தான பச்சைக்கீரை,

பசி தீர்க்க பழங்கள், பருக இனிக்கும் இளநீர் (அழிக்காதே)

 

Friday, August 6, 2021

உன் அம்மா ஓல்ட் ஃபேஷன்ட்!

 

“ஹாய்! சுமி!”

“ஹாய், மனோ!”

“சுமி! நீ இந்த “கெட்டப்”ல சூப்பரா இருக்கே.”

“தேங்க் யூ, மனோ. அது சரி, எதுக்கு இப்போ வரச் சொன்னே? எதோ முக்கியமான விஷயம்னு சொன்னே?”

”ஆமா, இந்த வாரம் மூணு நாள் லீவு வரது. வரயா?  நாம ஜாலியா ஊட்டி போயிட்டு வரலாம். என்ன சொல்றே?”

“அதெல்லாம் முடியாது, மனோ, உன் கிட்ட சொல்லியிருக்கேனே, எங்கம்மா விட மாட்டாங்க.”

“ஆஃபீஸ் டூர்ன்னு சொல்லிட்டு வா. ஜாலியா எஞ்சாய் பண்ணலாம்.”

“பொய்யெல்லாம் சொன்னா அம்மா கண்டுபிடிச்சுடுவா. எங்கம்மா என்ன சொல்லிட்டே இருக்காங்க தெரியுமா, இந்த ஆம்பிளைகள நம்பவேக்கூடாதுன்னு. இப்பவே நீ இன்ஸ்டாக்ராம் வழியா என் நண்பனானதெல்லாம் அம்மா கிட்ட சொல்லாம இருக்கேன். மனோ. அம்மா கிட்ட மறைக்கிறேனேங்கறது என் மனசாட்சிய எப்படி உறுத்துது, தெரியுமா?

“உங்கம்மா “ஓல்ட் ஃபேஷண்ட். அவங்களுக்கு இந்தக் காலத்து பிள்ளங்களப்பத்தி புரியாது. எப்படி எல்லாரும் ஜோடி ஜோடியா ஜாலியா போறாங்க. நீ எப்பப் பார்த்தாலும்  அம்மா அம்மான்னு சொல்லிட்டே இருக்கே. நாம ஒண்ணுமே எஞ்சாய் பண்ண முடியல்ல. கொஞ்சம் நெருங்கினா வெலகிக்கறே.”

“ஏன்னா எங்கம்மா என்னை வளர்க்க எப்படி பாடுபட்டிருக்காங்க தெரியுமா? நான் அம்மாவுக்குத் தெரியாம இப்ப உன்னை சந்திக்க வரதே தப்புன்னு தோணுது.”

“அதெல்லாம் இருக்கட்டும். இப்போ வெள்ளிக்கிழமை கிளம்பறோம். திங்கள் காலைல ரிடர்ன். எப்படியாவது நீ வந்து தான் ஆகணும். நான் எல்லா ஏற்பாடும் செய்யறேன். எதாவது சாக்கு சொல்லாதே. ஒனக்கு என் மேல லவ் இல்லையா? நான் உன்னை எப்படி லவ் பண்றேன் தெரியுமா? நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறே? நீ என்னை லவ் பண்ணலியா? ஒனக்கு என்னை பிடிக்கலையா?”

“பிடிக்காமையா உன்ன வந்து இப்படி திருட்டுத்தனமா “மீட்” பண்றேன்?”

“அப்போ வா.”

“அதுக்கு முன்னாடி  முறையா எங்கம்மாகிட்ட வந்து பொண்ணு கேளு. “

“அதெல்லாம் அப்புறமா செய்யலாம். இப்போ இந்த வாரம் நீ என்னோட வரே.”

“அப்போ ஒண்ணு செய். பெருசா கல்யாணம் இல்லேன்னாலும் நாலு பேர் முன்னால, என் அம்மா, என் தாய்மாமன் என் தரப்புல, உன் அப்பா அம்மா உன் தரப்புல, அவங்க முன்னிலைல என் கழுத்துல தாலியக் கட்டு. அதுக்கு எங்கம்மா சம்மதிப்பா. அப்புறம் நீ இழுக்கற இழுப்புக்கு நான் வந்துக்கிட்டே இருப்பேன்.”

“இங்க இப்பவே உன் கழுத்துல தாலி கட்ட நான் தயார்! இப்ப வா. இந்த அரசமரத்தடி பிள்ளையார் முன்னால உன் கழுத்துல தாலி கட்டறேன்.”

“ஏன் பெரியவங்க முன்னால கட்ட நீ தயங்கறே?”

“அது .. அது..”

“என்ன அது அதுங்கறே?”

“அது முடியாது.”

“ஏன் முடியாது?”

“அது வந்து, .. வந்து… சுமி, எனக்கு ஒரு மனைவி இருக்கா.”

”அட படு பாவி!”

“ஆனா சுமி, அவள நான் நேசிக்கல்ல, உன்னைத் தான் உசுருக்கும் மேலா நேசிக்கறேன். உனக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.

“என்ன வேணும்னாலும் செய்வியா?”

“என்ன வேணும்னாலும் செய்யறேன், சொல்லு. என்ன செய்யணும்?”

உன் மனைவியை “டைவோர்ஸ்” பண்ணனும். பண்றியா?”

“டைவோர்ஸா! அது கஷ்டம், சுமி.”

“ஏன்? என்ன கஷ்டம்?”

“ஏன்னா எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்குது.”

“அடப்பாவி! ஸ்கௌண்ட்ரல்!, ராஸ்கல்! இப்ப நீ இந்த எடத்த காலி பண்ணல்லேன்னா போலீஸைக் கூப்பிடுவேன். கெட் அவுட்!”

 

 

Wednesday, March 3, 2021

பேரின்பம்

 

கல்கியின் சிவகாமியின் சபதம் மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.

அதில் திருநாவுக்கரசர் அருளியதாக கூறப்பட்டுள்ள வரிகள் என்னை 

கவர்ந்தன.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

நாம் துன்பம் என்று நினைப்பது உண்மையில் துன்பம் அல்ல!

இன்பம் என்று கருதுவது உண்மையில் இன்பம் அல்ல.

இன்ப துன்ப உணர்ச்சியானது உலக பாசத்தினால் ஏற்படுகிறது.

இந்த பாசத்தைத் தான் பெரியோர் மாயை என்கிறார்கள்.

மாயை நம்மை விட்டு அகலும்போது

இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்பதை அறிவோம்.

அந்த இறைவனுடைய திருவருளாகிய பேரின்பம் ஒன்றுதான்

மிஞ்சி நிற்கக் காண்போம்.

Friday, January 1, 2021

நான் போறேன், சாமி! ஒரு தாயின் குமுறல்

 

சாமி, நான் போறேன். வேற வளி தெரியல்ல. நீ பளைய மாதிரி இல்ல. சாமி. நாம முன்னால சந்தோசமா தானே இருந்தோம்? பொன்னு பொன்னுன்னு என் மேல எத்தன ஆசையா இருந்தே? உனக்கு கூலி வேல தான். தோட்ட வேல. நான் மூணு வீட்ல வேலக்காரி. எதோ வந்த பணம் வச்சிட்டு ரெண்டு வேள சாப்பிட்டோம். நமக்கு பூவாயி பொறந்தா. சந்தோசமா இருந்த நம்ம வாள்க்கை எப்படி பாளாப்போச்சு?

உனக்கு கியாபகம் இருக்கா, பூ பொறந்த போது நீ எத்தன ஆனந்தப்பட்டே? “நம்ம பாப்பாவ நல்லா படிக்க வக்கணும், பொன்னு.”ன்னு நீ சொன்னியே.  அவளுக்கு நாலு வயசாகறச்சே அவள இஸ்கோல்ல கொண்டு போய் சேத்தமே? அவ இஸ்கோலுக்கு போக நீ தான் அவளுக்கு ஊனிபாம் போடுவே. தலைய ஆசையா சீவி பேண்டு போட்டு கட்டி , பொட்டு வெப்பே. நாயித்துகிளமை பார்க்குக்குப் போவோம். பாப்பா சறுக்கு மரத்துல வெளயாட நீ அவளத் தூக்கி விடுவே. ஊஞ்சஜல்ல உக்காத்தி ஆட்டுவே. அப்புறம் நாம வண்டில விக்கிற பலகாரம் வாங்கி திம்போம். பாப்பா குச்சி ஐஸ் கேக்கும்.நீயும் ஆசையா அவளுக்கு வாங்கித் தருவே. அதெல்லாம் மறந்து போயிட்டியா ஐயா? எப்படி ஐயா?

 நீ குடிக்க ஆரம்பிச்சே. என்னய கட்டிக்கறதுக்கு முன்னயும் நீ குடிப்பே. கொஞ்சமா. எனக்கு பயந்து கொஞ்சமா குடிப்பே. பிரண்ட்ஸோட கொஞ்சம் குடிக்கறது தான் புள்ளே, வேற ஒண்ணும் இல்லன்னு சொல்லுவே. நானும் ஆம்பிள்ளங்க  கொஞ்சம் குடிக்கறதுதான் வளக்கம்னு நெனச்சேன்.

ஆனா அதெல்லாம் பளய கதை. குடிப்பளக்கம் உன்னை நல்லா  பிடிக்க ஆரம்பிச்சுது.  உன் குடி ஏற ஏற, மொள்ள மொள்ள நம்ம குடும்பமும் சரிய ஆரம்பிச்சுது. வர வர உன் பணம் உனக்கு குடிக்க பத்தல. சாதுவா இருந்த நீ குடிச்சா ராச்சசனா ஆயிடுவே. என் தலமுடியப் புடிச்சு இளுத்து, அடிச்சாவது நான் சம்பாதிச்ச பணத்தை பிடிங்கிக்குவே. குடிப்பே. அப்புறம் நம்ம வீட்ல இருந்த பாத்ரம் பண்டம் எல்லாத்தையும் ஒண்ணொண்ணா கொண்டுபோய் வித்து குடிக்க ஆரம்பிச்சே. உன்னால வேலைக்கு சரியா போக முடியல்ல.  அப்பறம் அடிக்கடி போதைல உன் புத்தி தடுமாற ஆரம்பிச்சிடிச்சி. ஒரு நாளைக்கு என் தாலிக் கயித்த இளுத்தே. அதுல இருந்த துளி தங்கத்த எடுக்க. நான் திமிறி ஓடப்பார்த்தேன். ஆனா உன் வெறிக்கு என்னால ஈடு கொடுக்க முடியல்ல. என் கிட்ட இருந்த ஒரே தங்கம் அது தான். என் கொலுசு, அது, அதுக்கு முந்தியே காணாம போயிரிச்சு. என் கிட்டேர்ந்தே திருடினே. நான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்.

அப்பறம் பாப்பா வயசுக்கு வந்திட்டா. என்னெல்லாமோ நான் கனா கண்டுட்டு இருந்தேன்! அதை நல்ல கொண்டாடணும். அவளுக்கு புது சேலை எடுக்கணும், காதுக்கு கங்கணம் எடுக்கணும். நாலு பேர கூப்பிடணும்னு எல்லாம். ஆனா ஒண்ணும் முடியல்ல. பாவம். அவ என் வயத்துல வந்து பொறந்தா. அப்ப கூட எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருந்திச்சு. அவளும் ஒம்பதாவது கிளாசு எட்டிட்டா. அவள் எஸ்சேல்சி பரிச்சை எளுதி பாசாகணும். டீச்சர் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுது. எப்படியாச்சும் அத நெறவேத்தணும்னு ஆசைப்பட்டேன். உங்கிட்ட காலைல சொல்லும்போது நீயும் கொஞ்சம் கேட்டுப்பே. “ஆமா, பொன்னு. நீ சொல்றது சரி தான். நா இனிமே ஒளுங்கா வேலக்குப் போறேன்” அப்படீன்னு சொல்லுவே. ஆனா உனக்குள்ள இருக்கற பூதம் உன்னய விடல்ல.

எப்படியோ நாள கடத்திட்டு இருந்தேன். உன் கிட்டேயிருந்து பணத்த ஒளிச்சு வைப்பேன். எனக்கு கஞ்சி இல்லேன்னாலும் உனக்கும் பாப்பாவுக்கும் தந்திருவேன். வேல செய்யற வீட்ல எதாச்சும் பலகாரம் தருவாங்க. அத அப்படியே கொணாந்து உங்க ரெண்டு பேருக்கும் தந்திடுவேன். கஷ்டமான வாள்க்கைதான். ஆனாலும் ஒரு நிம்மதி இருந்திச்சு. அப்படியே இருந்திருந்தாக்கூட  நான் இன்னிக்கு இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன். இந்த கரோனா வந்தப்பறம் கள்ளுக்கடைங்க மூடினாங்க. அப்ப நீ கொஞ்சம் ஒளுங்கா வேலைக்குப்போனே. நானும் நிம்மதியா இருந்திட்டிருந்தேன். கரோனாக்கு நன்னி சொன்னேன். ஆனா பாளாப்போனவங்க மறுபடியும் தொறந்தாங்க. நீயும் வேதாளம் முருங்க மரத்துல ஏறின மாதிரி இன்னும் சாஸ்தியா குடிக்க ஆரம்பிச்சே. நானும் தலவிதின்னு பல்லக் கடிச்சிட்டு இருந்தேன்.

ஆனா நீ நேத்தைக்கு என்ன செஞ்சே, நெனவிருக்கா? நீ செஞ்சது  ரொம்ப தப்பான காரியம் சாமி. மன்னிக்கவே முடியாது. ராத்திரி சம போதைல வீட்டுக்கு வந்தே. நானும் பாப்பாவும் எப்பவும் மாதிரி உங்கிட்டேயிருந்து தள்ளி உக்கார்ந்தோம். ரெண்டு ரூம்பா இருக்கு, உள்ள போய் தாப்பா போட்டுக்க? திடீர்ன்னு நீ பாப்பாவின் கையப்பிடிச்சு இளுத்தே. போதை வெறில அவ  கிட்ட , உன் சொந்த மககிட்ட தப்பா கை வச்சே. குறுக்க வந்த என்னை தள்ளினே. எனக்கு வேற வளியில்லாம் வெறகு கட்டை எடுத்து உன் தலைல ஓங்கி ஒரு அடி வச்சேன். நீ விளுந்தே. பாப்பா ரொம்ப பயந்திட்டா.

ஒரு வேள அவள நானாக்கும்னு நீ நெனச்சிருக்கலாம். அவ நான் எளசா இருக்கறச்சே இருந்த மாதிரி இருக்கா. அப்படித்தான் இருக்கும்னு நெனைக்கறேன். ஆனா அது ரொம்ப தப்பு. இனி அப்படி நடக்கக்கூடாது. அதுனால இனிமே உங்கூட இருந்தா ஆபத்துன்னு தெரியுது. நான் போறேன். உன்ன விட்டுட்டு போறது சங்கடமா இருக்கு, சாமி. ஆனா இப்ப நீ நீயா இல்ல. ஒரு மிருகமா ஆயிட்டே. வேற வளி தெரியல்ல. இப்ப எனக்கு ஒரே லச்சியம், என் மகள காப்பாத்தணும். முடிஞ்சா படிக்க வச்சு டீச்சராக்கணும். அதத்தான் பாவம் அவ ஆசப்பட்டா. எனக்கு ரெண்டு கை இருக்கு. ஒளைக்க முடியும். கஸ்டப்பட்டாவது அவள படிக்க வைக்கணும். இல்லாட்டி போனா அவள ஒளுங்கா பார்த்துக்கிட்டு, ஒரு நல்ல பையன் கையில, ஒரு கெட்ட பளக்கமும் இல்லாத, படிச்ச  பையனுக்கு கட்டி வைக்கணும். நீ திருந்துவியா? எனக்கு நம்பிக்கை இல்ல. போறேன், சாமி. என்னயத் தேடாதே.

Friday, October 9, 2020

உடல் பருமன்

 

நான் சிறியவளாக இருந்தபோது எனக்கு தமிழ் சினிமா ரொம்ப பிடிக்கும். அப்போ ஒரு காமடி நடிகை, பெயர் அங்கமுத்துன்னு இருந்தாங்க. அவங்க ரொம்ப பருமனா இருப்பாங்க. சோகமான சீன்களுக்கு நடுவுல  கொஞ்சம் காமடி பண்ண, அவங்க தன் பருமனான தேகத்த இப்படியும் அப்படியும் ஆட்டி பேசி நடிக்கும் போது ரொம்ப வேடிக்கையா இருக்கும். நாங்க அவங்க நடிப்பையும் பருமனான உடம்பையும் பார்த்து சிரி சிரின்னு சிரிப்போம்

எனக்கு அவங்க ஒரு இஷ்டமான நடிகை. ஆனா இன்னிக்கு அந்த மாதிரி ஒரு நடிகையப்பார்த்து யாரும் சிரிக்க மாட்டாங்க. காரணம் எங்கே பார்த்தாலும் அங்கமுத்துகள் தான், சின்னவங்க, நடுத்தர வயசுக்காரங்க, பாட்டிகள் எல்லாரும்.

நான் மிகைப்படுத்தி சொல்றதா உங்களுக்குத் தோணுதா? ஒரு வேளை நிலைமை அவ்வளவு மோசமாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனா பொறுத்திருந்து பாருங்க. நான் சொல்றது ரொம்ப கரக்ட்டுன்னு சொல்வீங்க

இப்பல்லாம் டிவில வர, சீரியலை எல்லாம் பாருங்க. கதாநாயகிகளே நல்ல சதைப்பற்றோட காட்சி தராங்ககொடியிடையுள்ள கதாநாயகிகளைக் காண்பது குதிரைக்கொம்பாகிவிட்டது! அம்மா வேடத்தில் வருபவர்களோ சொல்லவே வேண்டாம். நல்ல குண்டாக இருக்க வேண்டும் என்பது  நியதியாகிவிட்டதுஹீரோக்கள் மாத்திரம் என்ன குறைந்தவர்களா? அவர்களும் இந்த பந்தயத்தில் பின் தங்குவதில்லை. உயரமா, உயரத்துக்கு தகுந்த பருமனா? ஊஹூம்!

போலீஸ்காரர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களால் தங்கள் தொந்தியையும் தொப்பையையும் தூக்கிக்கிட்டு திருடனை துரத்தி பிடிக்க முடியுமா, சொல்லுங்க?

               

காரணங்கள்

 

உடல் பருமன் ஒரு நோய் என்றே சொல்லலாம். அது சின்ன வயசு, வயசானவங்கன்னு பார்க்காது. ஒரு வேளை பெண்களை அது அதிகமா பாதிக்குதோன்னு தோணுது. ஆண்களும் ரொம்ப பின்னால தங்கிடல்ல. உடம்புல வெயிட் போடறதுல. ரெடியா கிடைக்கற ஃபாஸ்ட் ஃபூட் என சொல்லப்படும் பலகார சிற்றுண்டி வகைகள், ஸ்வீட்டுகள்,இவைகளே முக்கிய காரணம் வெயிட் ஏறுவதற்கு. அதுக்கு மேல உடலால் உழைப்புங்கறதே போயிடிச்சு  ,தேகப்பயிற்சி செய்யவேண்டும் என்ற நெனப்பே பலருக்கும் இல்லவே இல்லை.

 

ஒண்ணு, டிவி முன்னால உக்கார்ந்திருப்பாங்க, இல்லேன்னா செல்ஃபோன்ல எதாவது செய்திட்டிருப்பாங்க. இப்பல்லாம் பெண்களும் வேலைக்கு போறதுனால அவங்களுக்கு உணவு சமைக்க கிடைக்கும் நேரம் குறைவு தான். வெளிலேயிருந்து சாப்பாடு வரவழைக்கறது சகஜமாப் போச்சு. அந்த உணவுல சேச்சுரேடட் ஆயில், அதாவது கொழுப்பு சத்து நிரம்பியிருக்கற எண்ணையை உபயோகப்படுத்துவாங்க.அது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டும் இல்ல, சதை போடவும் அது ஒரு காரணம்.

 

இன்னொரு விஷயம், இப்பல்லாம் தடுக்கி விழுந்தா பலகாரக் கடைகள். நல்ல ருசியாத்தான் செய்து விக்கறாங்க. இல்லேன்னு சொல்லல்ல. வித விதமான ஸ்வீட்டுகள் நெய் சொட்ட சொட்ட. உப்பும் காரமும் நல்லா சேர்ந்த சுவையான முறுக்குகள், மிக்ஸர்கள். பல மாநில, பல நாட்டு பக்குவங்கள், அயிட்டங்கள். சாப்பாடு தான் இப்போ பெரிய பிஸினஸ். ஆபீஸ்ல வேலை செஞ்சு களைச்சுப்போன பெண்மணிகள் தான் இவர்களுக்கு பெரிய வாடிக்கயாளர்கள். ஆபீஸ்லேயிருந்து திரும்பும்  அவங்க நேரா பலகாரக் கடைக்கு தான் போவாங்க. மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு தயாரா எதாவது வச்சிருக்கணும். இல்லாவிட்டால ரகளை தான்

 

டீனேஜர்னு சொல்லப் படும் இளம்தலைமுறையினர் விஷயமோ கேட்கவே வேண்டாம். வாரக்கடைசியில் சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்டுக்கோ, ஸ்னேக் பாருக்கோ போய் அரட்டை அடித்துக்கொண்டு ஐஸ்க்ரீம், ஸ்னேக்ஸ் சாப்பிடுவாங்க, தங்கள் எடை கூடுவதைப்பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல். அது தான் ஃபேஷன். “வாழ்க்கையைஎஞ்சாய்பண்ணனும். அப்புறமா ஜிம்முக்கு போய் உடல்பயிற்சி பண்ணிஃபிட்டா ஆயிக்கலாம்.”

சைக்கிள்ள போறது நல்ல எக்ஸர்சைஸ். ஆனா இப்போ என்னடான்னா சின்ன பசங்க கூட பைக் ஓட்டிட்டு போறாங்க

ஸ்கூல்லேயிருந்து பிள்ளைங்கள் வீட்டுக்கு வந்ததும் ட்யூஷனுக்கு போகணும், அப்புறம் ஹோம் ஒர்க். கொஞ்சநஞ்ச நேரம் ஃப்ரீயா நேரம் கிடைச்சா மொபைல்ல கேம் விளையாடறாங்க, இல்லே, டிவி பாக்கறாங்க. இதெல்லாம் நொறுக்குத்தீன பேக்கட்டை பிரிச்சு கொறிச்சுக்கிட்டேதான். இப்போ இருக்கற பசங்க குண்டா இருக்கறது ஏன்னு தெரியறதா? நான் சமீபத்துல ஒரு பயங்கரமான செய்தி படிச்சேன், ஓவர் வெயிட்டா இருக்கற குழந்தைகளுக்கு பிற்காலத்துல கல்லீரல் பாதிக்கப்படுதாம்




தவறான கருத்துக்கள்

 

கர்ப்பிணிப்பெண்கள் நிறைய சாப்பிடணும்னு எல்லாரும்  நெனைக்கறாங்க. “ரெண்டு ஜீவன்களுக்கு சேர்த்து சாப்பிடவேண்டாமா?” குழந்தை பிறந்தப்புறம் அதே கதை தான். நிறைய நெய் தயிர் எல்லாம் சேத்துக்கணும். “உடம்புலேயிருந்து ரத்தம் எல்லாம் போயிரிச்சு, பாப்பாவுக்கு வேற பால் குடுக்கணும். நல்லா சாப்பிடு. நிறைய ரெஸ்ட் எடுத்துக்கோ.” அப்புறம் என்ன? ஜாலி தான், “சாப்பிட்டுவிட்டு ரெஸ்டா இருக்கலாம்.”  முக்கால்வாசிப் பெண்கள் பருமனாவது அப்போது தான். இன்னொரு காரணம் மிச்சம் மீதி உணவைவேஸ்டாபோகுதேன்னு பெண்கள் சாப்பிடுவது. வயிறுஒரு  குப்பைமேடு மாதிரி.

 

விளைவுகள்

 

அதிக உடல் எடையினால் வரக்கூடிய வியாதிகள்: பிரஷர், டையாபட்டீஸ், முட்டிவலி, இதயநோய்கள் இன்னும் பல.

 

இதற்கு என்ன செய்வது?

 

உடல் பயிற்சி, யோகா, உபவாசம், நல்ல சத்துள்ள அதே சமயம் உடம்பு எடையை ஜாஸ்தியாக்காம இருக்கற உணவு. இதெல்லாம் செஞ்சோம்னா நல்ல ஆரோக்கியமா, நோய்நொடி இல்லாம வாழ்க்கையை நடத்தலாங்க

 

இந்த கொரோனா வைரஸ் உலகத்தையே தன் கோரப்பிடியில் வைத்திருக்கும் இந்த சமயத்துல நாம நம்ம ஆரோக்கியத்த பார்த்துக்கவேண்டாமா? ஏற்கனவே உடம்புல  சுகர், பிரஷர் மாதிரி கோளாறுகள் இருந்தா இந்த கோவிடுக்கு ரொம்ப குஷி. அதனால உடம்பை ஃபிட்டா வச்சுக்கற வழியப்பாருங்க

 

இப்போ ஒரு புது வழி பிரபலமாயிட்டிருக்கு உடம்பு வெயிட்டைக் குறைக்க. அதைத்தான் ஆங்கிலத்துலஇன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்அப்படீன்னு சொல்றாங்க. அதாவது இடையில் இடையில் பட்டினி கிடப்பது. இது நம்ம நாட்டுல ஒண்ணும் புதுசு இல்லீங்க. ஆனா நாம தான் அதை மறந்துட்டோம். அதென்னஇன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்ன்னு கேக்கறீங்களா? அது ஒண்ணும் பெரிய விஷயமோ கஷ்டமான விஷயமோ இல்லீங்க. எங்க குடும்பத்துல எல்லாரும் அதை கடைபிடிச்சு வெயிட்டை நல்லா குறைச்சிட்டோம்

 

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க் நீங்க ஒரு 12 மணி நேரம், முடிஞ்சா 14 மணி நேரம் பட்டினி அதாவது உபவாசம் இருக்கணும். இதைத்தான்இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்க்’  அப்படீன்னு சொல்றாங்க. ராத்திரி சீக்கிரமா சாப்பாட்டை முடிச்சுக்கணும். 7 மணிக்கு இரவு சாப்பாடுன்னா, காலை காபியோ, டீயொ 7 மணிக்கு சாப்பிடணும். அப்போ நாம 12 மணி நேரம் உணவு இல்லாம இருப்போம் இல்லையா? அது தாங்க இதோட ரகசியம். இது ரொம்ப கஷ்டம் இல்ல, ஏன்னா இரவு முழுக்க 8 மணி நேரம் தூக்கத்துல போயிடும், இல்லீங்களா? முடிஞ்சா 14 மணி நேரம் ஃபாஸ்டிங்க் பண்ணலாம். அப்போ ரிசல்ட்  இன்னும் பிரமாதமா இருக்கும். கூடவே கண்ட கண்ட உணவை கட்டுப்பாடில்லாமல் சாப்பிடக்கூடாது.

 

இதையெல்லாம் எப்போ நடைமுறையாக்கறது? இப்போ! இந்த க்ஷணத்துலேயிருந்து ஆரம்பியுங்க. ஆரோக்கியமா வாழுங்க.