கமலம்: “வேதமா, வா.
எங்க இப்படி?”
வேதம் : “கடை வீதிக்கு
வந்தேனா, அப்படியே உன்னப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். என்ன ஆச்சு, உன் பொண்ண பொண்
பார்க்க வரப் போறான் ஒரு பையன்னு சொன்னியே?”
“அது இல்லைன்னு
ஆயிடுத்து, வேதம், அந்த பையன் என்னவோ வீகனாம். அது எல்லாம் நமக்கு சரிப்படாதுன்னு விட்டுட்டோம்.
வேல என்னவோ நல்ல வேலை தான். ஆனா என்ன பண்றது, அது என்ன கண்றாவியோ தெரியாது. எங்களுக்கு
இருக்கறது ஒரே பொண்ணு.”
“அது சரி, வீகன்னா என்னன்னு
தெரியுமா?”
“அதெல்லாம் தெரியாது.
எதுக்கு வீண் வம்பு? நாங்களோ ரொம்ப ஆச்சாரம். அது என்ன கண்றாவியோ, அதெல்லாம்
நமக்கு சரிப்படுமா, சொல்லு.”
“அது சரி. நீ
வெஜிடேரியன் தானே?”
“இதென்ன வேடிக்கை! ஏதோ
தெரியாத மாதிரி கேக்கறியே. நான் முட்டையை தொட்டது கூட கிடையாது.”
“அது சரி, நீ பால் சாப்பிடுவியா?”
“சாப்பிடுவேன்.
ராத்திரி வழக்கமா அரை டம்ளர் பால் சாப்பிடுவேன்.”
“தயிர்?”
“ஊம், அதெல்லாம் தானே சத்து
நமக்கு? மோருஞ்சாதம் சாப்பிடல்லேன்னா சாப்டமாதிரியே இருக்காது.”
“நெய்?”
“அது தானே அன்ன சுத்தி?
ரெண்டு முட்டை நெய் சாத்துல விட்டுக்கணும். உனக்கு தெரியாத மாதிரி கேள்வி கேக்கறியே?”
“எதுக்கு கேட்டேன்னா, இந்த
வீகன் இருக்காளே நீ இப்ப சொன்னியே, அவா எல்லாம் பாலு, தயிரு, நெய்யெல்லாம் சாப்பிட
மாட்டா. தெரியுமா?”
“அப்படியா? ஏன்?”
“அவா சொல்றா, அதெல்லாம்
மாட்டிலேர்ந்து தானே வருது, அதனால அதெல்லாம் “அனிமல் ப்ராடக்ட்”டாம்”
“இதென்ன புதுசா
இருக்கு? பின்ன அவா என்னதான் சாப்பிடுவா?”
“காய்கறி, பழம் அப்புறம்
பருப்பு, சாதம் இதெல்லாம் தான் சாப்பிடுவா.. அதனால இந்த வீகன்ங்கறவா எல்லாரும் உங்கள விட ஆச்சாரம்னு சொல்லலாம்.”
“ஐய்யயோ, இதெல்லாம்
தெரியாம போச்சே. நல்ல பையனை வேண்டாம்னு சொல்லிட்டோமே! இப்போ என்ன பண்றது?”
“மறுபடியும் அப்ரோச் பண்ணிப்பாரு. அதிர்ஷ்டம் இருந்தா கெடைப்பான்.”
No comments:
Post a Comment