நிறைய பெண்கள் கைகளையும் பாதங்களையும் மிருதுவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வதை முக்கியமாக கருதுவதில்லை. சில சுலபமான செயல்
முறைகளை கடைபிடித்தாலே போதும், பாதங்களும் கைகளும் அழகாக இருக்கும்.
முதலில் கைகளை கவனிப்போம். சப்பாத்திக்கோ, பஜ்ஜிக்கோ மாவு பிசையும் போது மாவு
நக இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும். வேலை முடிந்த பிறகு கைகளை , முக்கியமாக நக இடுக்குகளை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். சில சமயங்களில்
பார்த்தோமானால் கை கழுவின பிறகும் கட்டை விரல் நக இடுக்குகளில் ஒட்டிக்
கொண்டிருந்த மாவு சரியாக கழுவப்படாமல் அப்படியே இருக்கும். அது பிறகு நாளடைவில்
தண்ணீர் பட பட அழுகி நகக் கண்கள் வீங்கி புண்ணாக காரணமாகும்.
கால்களுக்கும் அதே போல தான். செருப்பு அணியாமல் வீட்டில் நடக்கும் போது கால்களில்
அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வீட்டில் காலணி அணிவதால் பித்த வெடியும் வராது,
பாதங்களும் நகங்களும் சுத்தமாக இருக்கும். குளித்த பிறகு மெல்லிய துணியால் கால் நக
இடுக்குகளை நன்றாகத் துடைக்க வேண்டும். இப்படி செய்வதால் கால் நகங்கள் புண்ணாகாமல்
ஆரோக்கியமாக இருக்கும்.
No comments:
Post a Comment